ajith -kathiகத்தி படத்தில் விஜய்க்கு பதில் அஜித் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என டைம்பாஸ் இதழில் இந்த வாரம் வெளியான நகைச்சுவை கட்டுரை அஜித் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்டுரை இதோ…!
கொல்கத்தா ஜெயிலில் இருந்து அஜித் தப்பித்து வெளியே வரும்போது ஓடி வரமாட்டார். நடந்தே வருவர். தலையே நடக்கும் போது வால் என்ன செய்யும்? கொல்கத்தா போலீசும் அவர் பின்னே ‘செல்லு தலைவா பானர்ஜி ஓடிப்போன ரூட்டை நீயும் சொல்லு தலைவா’ என பாட்டுபாடி நடந்துவருவார்கள். டைட்டில் அங்கிருந்து ஸ்டார்ட் ஆகும்.
ஏர்போர்டில் சமந்தாவுக்குத்தான் அஜித்தைப் பார்த்த நொடி காதல் பற்றிகொள்ளும்.உடனே கனவு பாட்டுக்கு போய் வந்து தான் காதலை சாவகாசமாக சொல்ல ‘நீ தரையில் நிக்கிற…. நான் ஆஆஆஆ ஆழத்துல நிக்குறேன்’ என டயலாக் பேசி காதலை ரிஜெக்ட் செய்வர். ‘வாழ்றதுக்காக சாகுற அளவுக்கு ரிஸ்க் எடுப்பேன்’ என சமந்தா டேக் ஆஃப் ஆகா தயாராகும் விமானத்தின் டயரில் தலையை கொடுக்க முயற்சி செய்ய, போனால் போகடும் என்று காதலித்து தொலைப்பார்.
கதைப்படி பாங்காங்க்குப் போகாமல் முதியோர் இல்லத்தில் இருக்கும்போது தான் ஜீவா அஜித்தின் பிளாஷ்பேக் கதிரேசன் அஜித்துக்கு தெரியவருகிறது. சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் வாக்கர்ஸ் க்ளப்பில் நடைபயிற்சி இருந்த வயதானவர்களை ‘வாங்க நடக்கலாம்’ என கடத்திகொண்டு வந்து தன்னூத்து பற்றி சொல்லி இருப்பர்.
தன்னூத்துனு ஒரு கிரமம் இருந்துச்சு தெரியுமா? தன்னூத்து ஒரு கருப்பு சரித்திரம். என நீண்ட லெக்சர் கொடுப்பார். எல்லோரும் ‘வாங்க ஜீவா தம்பி. வீராணுத்துக்கு நடைபயணம் போகலாம்’ என்று சொல்லி வீராணம் குழாய்க்குள் வாக்கிங் போயிருப்பர். 72 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய்க்குள் மக்கள் நடமாட்டம் இருப்பதை இஸ்ரே அனுப்பிய சாட்டிலைட் ஒன்று போட்டோ எடுத்து அனுப்பியிருக்கும். அதை வைத்து போலீஸ் மற்றும் மீடியா அந்த இடத்துக்கு போய் இருப்பார்கள். அங்கே தவறுதலாக போலீஸ் ஜீவனந்தத்தை கதிரேசன் என்று நினைத்து கொல்கத்தா போலீஸ் அடிக்க, ‘எவ்வளவு நாள்தான் நான் நல்லவனாவே இருக்குறது?’ எனக் கேட்ட படி ஆக்ஷன் பஞ்ச அடித்து போலீஸ்சை வெளுத்துக்கட்டி அங்கிருந்து தப்பி சென்னைக்கு ரயிலேறி இருப்பார்.
பிளாஷ்பேக்கில் ‘கம்யூனிஸம்னா என்ன அண்ணா?’ எனக்கேட்ட தங்கச்சியிடம் ‘ நீ ஏப்பம் விட்ட பிறகு உன் தட்டுல இருக்கற பிரியாணி இன்னொருத்தருடையது’ என சொல்ல தன்னூத்து கிராமமே பிரியாணியோடு விக்கிகொள்ளும்.
கிளைமாக்ஸில் வில்லன் நீல் நித்தின் முகேஷிடம்’ உன் மூக்கு இருக்கும் முழி இருக்கும், கண் இருக்கும், காது இருக்கும். உயிர் இருக்காது… அது!’ என கதிரேசன் அஜித் சொல்ல அவர் வெறியாகி சட்டையை கழட்டி ஃபைட்டுக்கு தயார் அவார். அதுவரை சால்ட் அண்ட் பெப்பர் தலையோடு வயதான தோற்றத்தில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ‘ஜீவனந்தம்’ அஜித் பொங்கி எழுந்து ‘ஏய்…..இந்த பைட்டை மாமன்மார், மைத்துனன்மார், பெண் வீட்டார், பெண் எடுத்தோர், பெண் கொடுதோர், இதய நோயாளிகள் பார்க்க வேண்டாம்’ என வேட்டியை மடித்து கட்டி ஆக்ஷன் அவதாரம் எடுப்பார்.
டபுள் ரோல்ல வெரைட்டி காட்ட மாட்டார் எங்க தல. வெறித்தனம் கட்டுவார்…. அது..!

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template