‘சந்தமாமா', ‘ராரா' படங்களிலும், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார் சுவேதா பாசு. விபசார வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். குடும்பத்தை காப்பாற்றவே இந்த தொழிலில் ஈடுபட்டதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.
கோர்ட் உத்தரவுப்படி மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சுவேதா பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சுவேதா பாசு தான் விபாசார வழக்கில் கைதாகவில்லை என்று கூறுவதுடன் தான் எந்த குற்றமும் செய்யவில்லை.
நான் ஒரு அப்பாவி என்று கூறி விடுவிக்கப்பட்டதாக கூறி வருகிறார். அதே சமயம் திரையுலகினர் தன்னை வேறு மாதிரியாக பார்ப்பதாக கண் கலங்குகிறார் சுவேதா.இவர் கைதானபோது சோகத்தில் மூழ்கிய இயக்குனர் ஹன்சல் மேத்தா தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இருந்தார்.
அதன்படி தற்போது சுவேதாவுக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி இருக்கிறார். அந்த வாய்ப்பை சுவேதாவும் ஏற்க முடிவு செய்திருக்கிறார். புது உற்சாகத்துடன் களத்தில் குதிக்கும் சுவேதாவுக்கு நேரம் ஒர்க் அவுட் ஆகி பிஸியான ஹீரோயினாவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template