தமிழில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஆண்ட்ரியா அடுத்து மலையாள படத்தில் நடிக்கச் சென்றார். ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார். சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரியா மீது பஹத்துக்கு நிஜ காதல் மலர்ந்தது. இதை பகிரங்கமாகவும் அறிவித்தார். ஆனால் ஆண்ட்ரியா காதலை ஏற்க மறுத்துவிட்டார். ஒரு வழியாக நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் பஹத். இந்நிலையில் ஆண்ட்ரியாவிடம்,‘யாரை மணந்துகொள்ளப்போகிறீர்கள்?’என்றபோது பதில் அளித்தார்.ரசூல் போன்று ஒருவர் கிடைத்தால் அவரை மணப்பேன் என்றார்.
அன்னயும் ரசூலும் படத்தில் வந்த ரசூல் கேரக்டரைத்தான் அவர் குறிப்பிடுகிறார். கதைப்படி ஆண்ட்ரியாவை உயிருக்கு உயிராக காதலிக்கும் கதாபாத்திரமாம் அது. சினிமாவில் ரசூல் கதாபாத்திரத்தில் தோன்றிய பஹத்தின் காதலை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா, தற்போது அந்த கதாபாத்திரத்தின் குணம்கொண்டவரை மணப்பேன் என்று கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template