தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் வருவதும், பிறகு அது காணாமல் போவதும் தொடர்ச்சியாக நடந்து வருவது தான்.
ஆனால் சமீபகாலமாக நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் மூத்த நடிகர்களுக்கும், இளம் தலைமுறை நடிகர்களுக்கும் இடையே அடிதடி தவிர மீதி எல்லா வாதங்களும் நடந்து வருகின்றன.
குறிப்பாக எப்பாடு பட்டாவது நான் நடிகர் சங்கத்தை கட்டுவேன். அதற்காக ஆர்யா, ஜீவா, என இளம் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து ஒரு படத்தில் நடித்து நிதி திரட்ட இருக்கிறோம் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறினார் விஷால்.
விஷாலின் இந்த தன்னிச்சையான முடிவைக் கேட்டு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அப்செட்டாகியிருக்கிறார்.
விஷால் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு எதிராக செயல்பட்டால் அவரை சங்கத்திலிருந்து நீக்குவோம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
இதுபற்றி சரத்குமார் மேலும் கூறியிருப்பதாவது : நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்க நிதியை நாங்கள் தற்போது 3½ கோடி நிதி இருப்பு இருக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம்.
இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள நிதியை வைத்து நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டி அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம்.
அதன் அடிப்படையில் திரைப்படத் துறையில் தொடர்பு உள்ள சத்யம் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினோம். இதில் 15 கோடி நடிகர் சங்கத்தின் நிதி. மீதி 50 கோடி நிதி சத்யம் நிறுவனத்தினுடையது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வாடகை வரும்.
மொத்தம் 29 வருடம் 11 மாதத்திற்கு லீசுக்கு விடுகிறோம். இதன் முடிவில் ரூ.170 கோடி நடிகர் சங்க சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். இதை பொதுக்குழுவில் கூடி அனுமதி பெற்று

இதை பொதுக்குழுவில் கூடி அனுமதி பெற்று தான் செய்துள்ளோம்.
நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல. விஷாலுக்கு தான் நாங்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது. ‘விஸ்வரூபம்’ படப்பிரச்சினையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா? பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறைகூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷால் இவ்வாறு செயல்படுவதற்கு பின்னணி உள்ளதா என்பது எனக்கு தெரியாது. நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு சரத்குமார் கூறியிருக்கிறார்.