எந்தத் தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் தயாரிக்க முன்வராத நிலையில்
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மட்டும் நம்பிக்கையோடு வாலு, வேட்டை
மன்னன் என இரண்டு படங்களை சிம்புவை நம்பி ஆரம்பித்தார்.
பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு மேற்கண்ட இரண்டு படங்களுக்கும்
கால்ஷூட்டுகளை கொடுத்து கிட்டத்தட்ட ஒன்றன் பின் ஒன்றாக படங்கள்
ரிலீசாகத் தயாராகி வரும் நிலையில் டிசம்பர் மாதம் ‘வாலு’ படம் ரிலீசாகும்
என்று சமூகவலைத் தளங்களில் உற்சாக அறிவிப்பை வெளியிட்டார் சிம்பு.
 அவரது ரசிகர்களும் அதை ஷேர் செய்து மகிழ்ந்தனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி இப்போது நிலைக்காது போலிருக்கிறது.
ஆமாம், இந்த வருடமும் சிம்புவின் படம் ரிலீசாகாது என்றே தெரிகிறது.
vaalu poster 193x300 இன்னுமா... நீங்க திருந்தல சிம்பு? : புலம்பித் தள்ளும் தயாரிப்பாளர்!
அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது சிம்புவின் சொந்தப்படமான ‘
இது நம்ம ஆளு’ என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
2012 தீபாவளி போய், 2013 பொங்கலும், தீபாவளியும் போய்,
இப்போது 2014 தீபாவளி முடிந்து விட்ட நிலையில் 2015
பொங்கலுக்கும் வாலு ரிலீசாவதில் உறுதி இல்லை.
காதல் தோல்விக்குப் பிறகு சிம்பு – ஹன்ஷிகா உறவு சுமூகமாக
இல்லை என்பதால் இருவரையும் நல்ல மூடுக்கு கொண்டு வந்து
படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை.




இன்னும் ஒரே ஒரு பாடல்காட்சி மட்டும் பாக்கி உள்ள நிலையில்
முடிந்த போன தனது சொந்தப்படமான ‘இது நம்ம ஆளு’ படத்தின்
ரிலீசில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி வருகிறாராம் சிம்பு.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ரிலீசாகப் போகும் படம் என்கிற
பில்டப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி அதன்மூலம் வசூலை
அள்ளலாம் என்பது தான் சிம்புவின் திட்டமாம். இதனால் வேண்டுமென்றே
‘வாலு’ படத்தின் படப்பிடிப்பை தாமதப்படுத்துவதாக சிம்பு மீது ‘வாலு’
வட்டம் புகார் கூற ஆரம்பித்திருக்கிறது.
உங்களை நம்பி இவ்ளோ கோடி செலவு பண்ணிட்டேன், இன்னுமா
நீங்க திருந்தல சிம்பு? என்பது தான் வாலு தயாரிப்பாளரின்
பெரும் புலம்பலாக இருக்கிறது.
சொன்னா கேட்கிற ஆளா ‘நம்ம ஆளு’….?