யாருக்குமே தெரியாமல் நடந்த நிச்சயதார்த்தம் இப்போது
உலகமே நம்புகிற அளவுக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது.
எல்லாம் த்ரிஷா- வருண்மணியன் திருமண சமாச்சாரம் தான்.
30 வயதைத் தாண்டிவிட்ட த்ரிஷா எப்போது திருமணம்
செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில்
 தான் சென்னையைச் சேர்ந்த கட்டுமான அதிபரும்,
தயாரிப்பாளருமான வருண் மணியனை திருமணம்
செய்யப் போகிறார். நிச்சயதார்த்தம் கூட நடந்து
விட்டது என்று சில தினங்களுக்கு முன்பு
பரபரப்புகள் கிளம்பியது.
இந்த திருமண ரகசியத்தை த்ரிஷா தரப்பில்
மறுத்தாலும் அவரும், வருண்மணியனும்
நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோவும்,
த்ரிஷாவின் விரலில் வருண்மணியன் போட்ட
நிச்சயதார்த்த மோதிரப் போட்டோவும் 
இணையதளங்களில் லீக்கானது.
அதன்பிறகும் கூட எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கல,
திருமணம் நடந்தா கண்டிப்பா எல்லோர்கிட்டேயும்
சொல்லுவேன் என்று இன்றுவரை சொல்லிக்
கொண்டிருக்கிறார் த்ரிஷா.
ஆனால் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை,
பட வாய்ப்புகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக
அவர் அதை மறைக்கிறார் என்று கூறப்பட்டு வரும்
நிலையில் தற்போது ஏற்கனவே கமிட்டான ஒரு
படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் த்ரிஷா.




 

ஜெயம்ரவி ஹீரோவாக நடிக்கும் இன்னும் டைட்டில்
வைக்கப்படாத புதுப்படம் ஒன்றை ‘உதயம் என்எச்4′
என்ற படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார்.
இதில் தான் ஹீரோயினாக த்ரிஷா கமிட்டாகியிருந்தார்.
இப்போது திருமணச் செய்திகள் உறுதியாக வெளிவரும்
நிலையில், அவரை தூக்கிவிட்டு அவருக்குப் பதில் இவன்
வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்த
சுரபியை கமிட் செய்திருக்கிறார் டைரக்டர் மணிமாறன்.
இந்தப்படம் தவிர இன்னும் சில படங்கள் கூட த்ரிஷாவின்
கையைவிட்டு போவது போல உள்ளது.
இதனால் “ எம்பொண்ணு கமிட் பண்ணி வெச்சிருந்த
எல்லாப் பட வாய்ப்புகள் போக ஆரம்பிச்சுடுச்சு…
இப்போ உங்களுக்கு சந்தோஷமா? என்று திருமணச்
செய்தியை பரப்பி விட்டவர்கள் மீது குமுறிக்
கொண்டிருக்கிறார் த்ரிஷாவின் அம்மா உமா.
இப்படியெல்லாம் ‘தடாலடிகள்’ நடக்கும்னு யார் கண்டது..?