சேரன் இயக்கி தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா.
டெல்லியில் பிறந்து செகந்திராபாத்தில் வளர்ந்த பத்மப்ரியா அடிப்படையில் கிளாஸிகல் டான்ஸர்.
அவ்வப்போது மாடலிங்கும் செய்த வந்த பத்மப்ரியா, 2004 ஆம் வருடம் சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் நடித்தார்.
பிறகு தமிழுக்கு வந்த பத்மப்ரியா, ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ’பொக்கிஷம்’ உட்பட சில படங்களில் நடித்தார்.
தமிர்ப்படங்கள் மட்டுமின்றி, பல தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்த நடிகை பத்மப்ரியாவுக்கு இன்று மும்பையில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பத்மப்ரியா.
ஆராய்ச்சிப் படிப்பிற்காக நியூயார்க் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா அங்கே ஜாஸ்மினுடன் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஐஐடியில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துள்ள ஜாஸ்மின் தற்போது மசாசூட் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் உயர்பதவியில் இருக்கிறார்.
பத்மப்ரியா – ஜாஸ்மின் திருமணம் இன்று மும்பையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற இருக்கிறதாம்.
இந்த திருமணத்துக்கு அவர்களது உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பதாகவும், பத்மப்ரியாவை அறிமுகப்படுத்திய சேரன் உட்பட திரைப்படத்துறையைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பு இல்லை என்றும் தகவல்.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template