இந்தத் தகவல் எப்படியோ மீடியாக்களுக்கு பரவவும், அதை ரகசியமாக வைக்க ஆசைப்பட்ட த்ரிஷாவின் அம்மா இரவு 10 மணி வாக்கில் தனக்கு தெரிந்த பெண் நிருபருக்கு போன் செய்து த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. அப்படி நடந்தால் நாங்களே முறைப்படி எல்லோருக்கும் சொல்வோம் என்றார்.
த்ரிஷாவும் தன் பங்குக்கு தனது ட்விட்டரில் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை. இப்போது நான் பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறன்’ என்றார்.
ஆனால் அடுத்த நாளே வருண் மணியனுடன் த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும், நிச்சயதார்த்தத்தின் போது மாற்றிக்கொண்ட மோதிரப் புகைப்படமும் இணைய தளங்களில் லீக்கானது.
அதை விசாரித்த போது இந்த திருமணச் செய்தியால் அவர் தற்போது நடித்து வரும் படங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மறைக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நடிகை ராய் லட்சுமியும் ”நடந்ததை ஏன் மறைக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்” என்று த்ரிஷாவின் நிச்சயதார்த்த ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ராய் லட்ட்சுமியும், வருண்மணியனும் பல வருடங்களாக ‘திக் பிரெண்ட்ஸ்’ என்பதால் அவர் சொல்வதை ரசிகர்கள் 100 சதவீதம் நம்பலாம்.