ஹன்சிகா சுயநலக்காரி என்றும் தலைக்கனம் பிடித்தவர் என்றும் இணையதளங்களில் செய்திகள் பரவி உள்ளன. இதை அவரே தெரிவித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஹன்சிகா கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். நான் அப்படி சொல்லவே இல்லை என்றும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன. என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது:–
‘மீகாமன்’ படத்தில் திமிர் பிடித்த பெண் கேரக்டரில் நான் நடிக்கிறேன். அந்த படத்தில் என் கேரக்டரை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். இதை தான் பேட்டியாக கொடுத்து இருந்தேன்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் திமிர் பிடித்தவன் என்றும் சுய நலக்காரி என்றும் சொன்னதுபோல் செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன. இது தவறு. இந்த செய்தியை பரப்பியது யார் என்று தெரியவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்றார்.
ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template