எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் விமல், அஞ்சலி, சூரி நடிக்கும் படம் ‘மாப்பிள்ளை சிங்கம்’. முதல்கட்டப் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பில் அஞ்சலி  நடிக்க உள்ளார். 
சில நாட்களாக சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கியிருந்த அஞ்சலி மீண்டும் ஜெயம் ரவியின் 'அப்பாடக்கரு’ படத்தில் ஒப்பந்தம் ஆனார். 
எனினும் முன்பு போல் அதிகம் படங்களை ஒத்துக்கொள்ளாமல் இருந்துவந்த அஞ்சலி மீண்டும் வரிசையாக படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.
தமிழில் ‘மாப்பிள்ளை சிங்கம்’, 'அப்பாடக்கரு’ என ஒப்பந்தமான அஞ்சலி, தெலுங்கில் இவர் நடித்து ஹிட்டான ‘கீதாஞ்சலி’ படத்தின் இயக்குநர் ராஜ்கிரண் அடுத்து தான் இயக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திலும் அஞ்சலியையே ஒப்பந்தம் செய்துள்ளார். 
கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் அஞ்சலி நடிக்கும் ’தீரா ராணா விக்ரமா’ என்ற படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுவீச்சீல் நடந்துவருகிறது.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template