நடிகர் நடிகைகளை ஆரம்ப காலத்தில் மீடியாக்கள் தான் வளர்த்து விடுகின்றன. ஆனால், அவர்களோ வளர்ந்த பிறகு மீடியாக்களை ஜென்ம எதிரிகள் போன்று பார்க்கும் நிலைதான் சமீபகாலமாக நிலவி வருகிறது.
அந்த வகையில், வைகைப்புயல் வடிவேலு, தனது மகனின் திருமணத்தை மதுரையில் நடத்தியவர், அதற்கு எந்த மீடியாக்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. மீறி அந்த பக்கமாக சென்றவர்களுக்கு கூட உள்ளே அனுமதியில்லை.
இந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் மீடியாக்கள் விசயத்தில் வடிவேலுவை போன்று மனநிலையைத்தான் கடைபிடிக்கிறார். அதாவது, வருண்மணியனுடன் தனக்கு நடந்த திருமண நிச்சயதார்தத்திற்கு எந்த மீடியாக்களையும் அவர் நெருங்க விடவில்லை.
சினிமா நண்பர்களுக்கு அவ்வப்போது கொடுக்கும் பார்ட்டிகளில் மீடியாக்களை எப்படி நெருங்க விடாமல் புறக்கணித்தாரோ அதே நிலையைதான் தொடர்ந்தார். இதேபோல், அடுத்தபடியாக தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்கும் அவர் மீடியாக்களை அனுமதிக்கப்போவதில்லையாம்.
காரணம், அங்கு ஏதேனும் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அதை மீடியாக்கள் பெரிய மலையளவு பிரச்சினையாக்கி டென்சன் பண்ணி விடுவார்கள் என்று கூறி வரும் த்ரிஷா, திருமணத்திற்குகூட அதிக நெருக்கமானவர்களுக்கே அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளாராம்.


அதன்பிறகு நடைபெறும் வரவேற்புக்கு மட்டும் குறிப்பிடத்தக்க மீடியாக்களை அனுமதிக்க முடிவு செய்திருக்கிறாராம். 

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template