சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கி விட்டாலும்
தனது இளைய மகன் சண்முகப்பாண்டியனை
ஹீரோவாக்கி விட்டார் கேப்டன் விஜயகாந்த்.
பல மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட
 சகாப்தம் படத்தின் படப்பிடிப்பு ஹீரோயின்கள்
கிடைக்கும் வரை டல்லடித்தது.
இப்போது ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள்
கிடைக்கவும் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று
 வருகிறது.
கேப்டன் என்றாலே ஒரு விசேஷம் தான்.
அப்படியிருக்கும் போது அவர் பேனரில்
தயாராகும் படம் மட்டும் விசேஷன் இல்லாமல்
 இருக்குமா என்ன?
போனவாரம் தான் சகாப்தம் படத்தில் தனது மகனுக்காக
கெஸ்ட் ரோலில் விஜயகாந்த் நடிக்கப் போகிறார்
என்கிற நல்ல செய்தியை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு தந்தார்கள்.
இந்தவாரம் சகாப்தம் படத்தின் கிளைமாக்ஸைப் பத்தி
 ஒரு ஆச்சரியத் தகவலை தந்திருக்கிறார்கள்.
சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன்
மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில்
ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட்
 சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதில் ஹீரோ சண்முகப் பாண்டியன் ஐம்பது
 வில்லன்களுடன் 15 போட்டுகளில் 200 துணை
 நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக்
காட்சியில் பங்கேற்றார்.
அந்த சண்டைக்காட்சியை 5 கேமிராக்களை வைத்து
மிகப் பிரமாண்டமாக படமாக்கினார் ஒளிப்பதிவாளர்
 பூபதி. மேலும் படத்தில் இன்னும் கூடுதல்
 பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே
 ஹெலிகாப்டரில் பறந்து பறந்து இந்த சண்டைக்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
மொத்தம் 4 நாட்கள் நடைபெற்ற இந்த சண்டைக்
 காட்சியை தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டன்ட்
 மாஸ்டர் கேச்சா அமைத்திருந்தார்.
இப்படத்தின் மூலம் சவ்ரவ் என்ற ஹிந்தி வில்லன்
 நடிகரும் தமிழில் அறிமுகமாகிறார்.
சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக நேகாவும்
, சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.
இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன்,
பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி
, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன்,
 பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல்
விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
எத்தனை பேர் நடிச்சாலும் அது கேப்டனோட ‘
அடி’க்கு ஈடாகுமா..?