சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில்
பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான கபிலன் வைரமுத்து
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழி வளம் கற்பனை
வளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது.
இளையதலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம்
செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும்.
தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்” .“கண்ணதாசன் ஒரு தனி
மனிதர் அல்ல. அவரைத் தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு
தமிழ்த்தலைமுறை தன்னைத் தெரிந்து கொள்கிறது” என்றும் தன்
உரையை நிறைவு செய்தார்.
கபிலனைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா கண்ணதாசன்
ஒரு காலப்பெட்டகம் என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்தினார்.
விழாவில் குழந்தைகளும் இளைஞர்களும் மேடை ஏறி
கண்ணதாசனின் பாடல்களைப் பாடினார்கள்.
விழா நடந்த 5 மணி நேரமும் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.
கபிலன் வைரமுத்து முத்தையா இருவருக்கும் எழுத்தாளர் கழகம்
பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி சிறப்பித்தது.