‘ஜிகர்தண்டா’ படத்தில் அனைவரின் பாராட்டை பெற்ற சிம்ஹா தற்போது நடித்து வரும் படம் ‘மசாலா படம்’. இதில் மிர்ச்சி சிவாவும் இவருடன் இணைந்து நடிக்கிறார். சிம்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்திற்கு சிவா வசனம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் இப்படத்தை லஷ்மன் இயக்குகிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி தேவி நடிக்கிறார். இப்படத்திற்கு முன் நில் கவனி செல்லாதே என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். தற்போது மசாலா படத்தில் திரைக்கதையை எழுதியுள்ள லட்சுமி தேவி, துணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தி முடித்த படக்குழுவினர் தற்போது பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சிம்ஹா-சிவா கூட்டணியில் ஆடாம ஜெயிச்சோமடா வரவேற்பு பெற்றதால், இப்படமும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template